எப்பருவத்தினரும் செவ்வாழைப் பழத்தை தினமும் உண்டு வரலாம். உடல் ஆரோக்கியம்
பலப்படும். தோற்ருநோஇகள் அணுகுவதில்லை, நீடித்த கண்பார்வையைத் தருகிறது. நோய்
அணுகாது. மேனியைப் பாதுகாத்து உயிரை வளர்க்கிறது.
இளமை முறுக்கில் காணுவதிலும், கர்பத்திலும் ஏற்படும் சில மன வக்கிரங்களுக்கு
ஆளாகி, தங்களது பெருமைக்குரிய ஆண்மையை வீணடித்துக் கொள்ளும் வாலிபர்கள்
திருமணத்திற்குப் பிறகு மிகவும் அவதியுறுவார்கள். தாம்பத்திய உறவு செயலர்றதால் மன
அமைதியை இழப்பார்கள். இத்தகைய நபும்சகத் தன்மையைக் குணப்படுத்த வல்லது,
செவ்வாழைப்பழம்.
செவ்வாழை எல்லாவித நிலங்களிலும் பயிராகிவிடும் என்று கூறுவதற்கில்லை.
சிறப்புத்தன்மை வாய்ந்த நிலங்களில் மட்டுமே பயிராகும். பாதரஸ் சத்து நிறைந்த வளமான
பகுதிகளில் பயிராகும் செவ்வாழை, மிகுந்த மருத்துவத்தன்மை கொண்டது.
பொதிகை மலைச்சாரல் அத்தகைய சிறப்புத் தகுதி வாய்ந்ததாகும். அங்கு பயிராகிவரும்
செவ்வாழை பழங்களுக்கு மருத்துவப் பயன் அதிகம் உண்டு.
மேற்கூறிய நபும்சகத் தன்மையுடவர்கள் நன்கு கனிந்த செவ்வாழைப் பழத்தை தினம்
ஒன்றாக தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும். நரம்புகள் திடப்பட்டு
புத்துனற்சியடையும், சுறுசுறுப்பும் மனத்தேம்பும் பெறுவர்.பருவ ஞானக்கேட்டால் இழந்த
ஆண்மையை மீட்கலாம்.
ஆண், பெண் இருபாலரும் மலடாக இருந்தாலும் மேற்கூறிய முறையை அனுசரித்தால் மலடு
நீங்கிக் கருத்தரிக்கலாம். மங்கலப் பொருளான மஞ்சள் நிறம் கொண்ட வாழைப்பழம்
இறைவழிபாடு நிவேதனத்தில் படைக்கப் படுகிறது. எவ்விதமான மங்கள நிகழ்ச்சிகளும் பிரதான
இடம் வகிப்பது.
ஒன்றின் பாரம்பரியச் சிறப்பைக் கூறுகையில் ‘வாழையடி வாழை’ என்று சிறப்பிக்கும்
மரபு, வாழையின் பெருமையை கூறும். கிழங்கு, பட்டை, நார், தண்டு, சாறு, இல்லை, பூ
என்று அனைத்துப் பகுதிகளும் பயனுடையவை. கிழங்கும், தாண்டும் சமயளுக்குரியவை.
சிறுநீரைப் பெருக்கி சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் தன்மையுடையது.
பட்டையிலிருந்து பிழியப்பட்ட சாறு கொண்டு நாகப்பாம்பின் நஞ்சை முறிக்கலாம்.
எத்தகைய தீப்புன்னையும் வாழைப்பட்டையின் சாறு குணமாக்க வல்லது. பூவைப் பருப்புடன்
பாகம் செய்து உண்ண உள்ளழல் அகலும். தோல் கருத்த கனிந்த வாழைப் பழங்களே பூரண
மருத்துவப் பயன் மிக்கது.
No comments:
Post a Comment